பிரமிட் சுவாரஸ்யமான மர்மங்கள் 2

எகிப்த் பிரமிட் பற்றிய மேலும் சில தகவல்
****************************************
பிரமிட் உள்ள இடத்திலிருந்து 10-15
தொலைவில் பல பல பிரமிட் கள் உள்ளது.
அவையாவும் அரச பரம்பரையின்
வம்சாவழியை சார்ந்தவர்கள் . முக்கிய பிரமிட் இருக்கும் இடத்தில் மொத்தம 7 உள்ளது ,அதில்முக்கிய 3 தான் நாம் பார்ப்பது. மூன்றில் முதன்மையாக இருக்கும் மிக பெரியதின் உச்சியை பார்த்தால்மட்டும், போல்ட் செய்ததுபோல் இருக்கும். முதலில் முக்கிய மூன்று பிரமிட்களும் முழுமையாக போல்ட் செய்து தான் இருந்தது. பின்நாளில் வந்த மிக பெரிய பூகம்பம் எகிப்தில் வந்த போது ஏற்ப்பட்ட அழிவில் பிரமிட் மேல் உள்ள போல்ட் மட்டுமே சரிந்தது. மீது மூன்று பிரமிட்கள் சேதம் அடைந்தன்.. முக்கிய மூன்றில் ஒன்றில் மட்டும் பொது மக்கள் உள்ளேசென்று பார்க்க அனுமதி. உள்ளே 300-500 மீட்டர் வரைசெல்லும் பாதை,பிறது 1000 சதுரஅடி பரப்பளவு உள்ள சம தளத்தில் பன்டைகால மீதமுள்ள நிகழ்வை பார்க்களாம் ஆராய்ச்சியின் போது அங்கு எடுத்த பொருள் ,தங்கத்தால் செய்த அறை ,மம்மி முதலியன எகிப்து அருங்காச்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே !
*************************************
ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள் !
எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது
என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச்
சொல்லாகும் .
கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய
மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 2600 : எகிப்திய தமிழினத்தவராகிய
மாயர்களால் பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள்.
இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு '
என்று அழைக்கப் பட்டது .
சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில்
புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது
"சிறு இடு " .
மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால்
"பெரும் இடு" அமைப்பர் . பெரும் + இடு =
பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று
எகிப்தில் அழைக்கப் படுகிறது .
தமிழர்கள் உலகின் பல பாகங்களில்
வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல . பல
மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய்
அமைந்து , பல மொழிகளுக்கும் பல
சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க உலகின் தொல்
நாகரீகமே தமிழர்களுடையது தாமிரபரணி
ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர்
இதற்கு சான்று. இது ஓர் இடுகாடு.
இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன்
பரப்பளவு 114 ஏக்கர்.........
மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில்
தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம்.
அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.
பிரபஞ்ச சக்தியை பல மடங்கு கிரகித்து மனிதன் உடம்பிற்குள் செலுத்தும் பிரமிக்கவைக்கும் பிரமிடு அற்புத அதிசயங்கள்..
*******************************************************************************************
பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை ஈர்த்து
தன்னுள் தக்க வைக்கும்அமைப்பு
பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின்
வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த
கலவையால் பெறப்படும் ஆற்றல் தான்
பிரமிடின் ஆற்றலாகும்.
பிரமிடுகள் தங்களுக்குள் சக்தியை
வெகுவாகக் கொண்டிருக்கின்றன..
பிரமிடு வடிவம் உள்ளேயும்,
வெளிப்புறத்திலும்கூட தன் ஆற்றலால்
தட்பவெப்ப நிலையிலிருந்து
பொருட்களுக்கு புத்துணர்ச்சி
தருவதை மிக விஞ்ஞானப்
பூர்வமான உணரமுடிந்தவை...
பிரமிடுகளின் கூம்பு வடிவ
அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து
ஒரு வித மின்காந்த ஆற்றலை உள்
வாங்குகிறது.
பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை,
பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப்
பரவ வைப்பதுதான் ரகசியம் ..
.வடிவமைக்கப்பட்ட வடிவ கணித
கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை
ஒன்றுதிரட்டி சேமிக்கும்
தன்மையுடையது என்ற உண்மையை,
பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே,
அக்கால எகிப்திய அறிஞர்கள்
அறிந்திருந்தனர்.
எனவே பிரமிடை வடிவமைத்து, பயன்படுத்தினர்.
சாதரணமாக கெட்டுப்போகும் பழம், பால்
போன்றவை பிரமிடின் உள்ளே
கெட்டுப்போகாமல் இருக்கின்றன். காபி,
ஒயின், பழச்சாறு போன்றவற்றின் ருசி
அதிகமாகின்றது. பிளேடு, கத்தி
போன்றவற்றின் கூர்மை மழுங்காமல்
இருக்கின்றன. .பதப்படுத்தி காத்தல்
,துர்நாற்றத்தை நீக்கி, அறையின்
தூய்மையைக் காக்கின்றது பிரமிட்.
காயங்கள், கட்டிகள், சிராய்ப்புகள்
முதலியன விரைவில்
குணமடைகின்றன.
உடல் பருமனைக்
குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்கின்றது.
ஆஸ்துமா, பல்வலி, தலைவலி,
சளித்தொந்திரவு, இரத்த அழுத்தம்,
மூட்டுவலி, இதயத்துடிப்பு,
தூக்கமின்மை போன்றவற்றை
குணப்படுத்துகின்றது.
கண் சம்பந்தப்பட்ட நோய். ஜீரணக்கோளாறு,
தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவைகளை
குணப்படுத்தி இளமையை
அளித்து.சிகிச்சை அளித்தல் பிரமிட்
சக்தி!
பிரமிடினுள் தியானம் செய்யும்
பொழுது அகவுடல் பிரயாணம்
மிக எளிதாக நிகழ்கின்றது.
வாழ்வின்பூமியின் அடியில் எங்கும் நீர்
நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர்
வேண்டுமானால், ஒரு
கிணற்றிலிருந்தோ,
குளத்திலிருந்தோ தான் எடுக்க
வேண்டியுள்ளது. பிரமிடுகளைப்
பற்றிய பல பிரமிப்பானத் தகவல்களை
.பிரமிட் தியானத்தினால் மிகத்
தெளிவாக நினைவில் உணரமுடியும்
சூட்சுமம் நிறைந்தவை..!
உலகின் கண்டங்களையும் கடல்களையும்
சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன்
என்ற கோட்டின் மேல்
அமைக்கப்பட்டுள்ளன.
எப்போதுமே குன்றுள்ள இடத்தைச்
சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சக்தி
இயற்கையாகக் குடிகொண்டிருக்கும்.
அதற்கு குன்றினுடைய பிரமிடு
போன்ற வடிவம் ஒரு காரணம்.
நாமக்கல் மலைக்கோட்டை , திருச்சி
மலைக்கோட்டை, திண்டுக்கல்
மலைக்கோட்டை போன்றவை சக்தி
அதிர்வுகளை தன்னக்த்தே கொண்டு
மிளிர்கின்றன..
அனைத்து சமய வழிபாட்டு தலங்களும்
பிரமிட் போன்ற ஒரு கூம்பு வடிவமான
அமைப்பில் தான் இருக்கும். தஞ்சை
பெரிய கோவிலும் , மற்ற ஆலய
கோபுரங்களும் பிரபஞ்ச அதிர்வுகளை
ஈர்த்து மனத்திற்குப்புத்துணர்வு
அளிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன..!
விழிப்புணர்விடன் நிகழும் அகவுடல்
பயணத்தில் பெறப்படும் அறிவின்
துணைகொண்டு அக்கால அறிஞர்கள்
"பெரிய பிரமிடை கட்டினார்கள். இது
நம்மை மிக உயர்ந்த நிலைக்கு
அழைத்துச் செல்லும் சாதனமாக
அமைக்கப்பட்ட கருவியாகும்
.பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள்
அமர்ந்து செய்யும் தியானம் 'பிரமிட்
தியான'மாகும்.
பிரமிடினுள் அமர்ந்து செய்யும்
தியானத்தில் சாந்தமான
மனநிலையிலிருந்து, மிக உன்னதமான
நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத்
திறனையும் பலர் பெற்றுள்ளனர்.
பிரமிடினுள் அமர்ந்து தியானம்
செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல்
செய்யும் தியானத்தில் பெறும்
ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப்
பெறுகின்றோம்.
பிரமிட் தியானத்தில் தேவையற்ற
உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல்
முழுவதும் ஒரு ஓய்வு நிலையை
அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு
உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான
உணர்வு நிலையைத் தருவதாக
உணரலாம்..
தியானத்தின் ஆரம்ப நிலையில்
உள்ளவர்களுக்கு மிக அதிகமன
ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட்
உருவாக்குகின்றது.
மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க,
பிரமிட் உதவுகின்றது. பிரமிடினுள்
செய்யப்பட்ட பல சோதனைகளிலிருந்து
அறிகிறோம்..
இந்த பிரமிட்டுக்குள் இருந்து தியானம்
செய்தால் மனதை
ஒருமைப்படுத்துவதை பலமடங்கு
இலகுவாககுகிறதாம்.
பிரபஞ்சத்திலுள்ள சக்திகளுடன்
தொடர்புகொள்ள வைக்கிறதால் தான்
இது சாத்தியமாகிறது.
.மனிதனின் அதிசய தக்க ஆற்றல்
,அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள்
பல நூற்றாண்டுகள் கடந்தும் ,இன்னும்
பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும்
அற்புதத்தை உணரவேண்டும்..
கோவையில் பெர்கஸ் பள்ளி வளாகத்தில்
பிரமிடு அமைப்பை அமைத்து இராம
.அரங்கநாதன் அவர்கள் அதன் சிறப்புகள்
பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார்.
கோவை பஜனகோல மாருதி ஆலயத்தில்
பிரமிடு வடிவ தியான மண்டபம்
அமைத்து அதனுள் ஆன்மீக அதிர்வலைகள்
சிதறாமல் தியானம் செய்பவருக்கு
கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..
பஜன மாருதி ஆலய வளாகத்தில்
பிரமிடு வடிவ தியானமண்டபம்.
பிரமிடின் உட்புற தியான அமைப்பு..
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்
அமைந்திருக்கும் ஈஷா யோக
மையத்தில் தியானலிங்கத்தைசுற்றி
குகைகள் போன்ற அமைப்பு அமர்ந்து
சின்முத்திரை தாங்கி குறிப்பிட்டநேரம் தியானம் செய்பவருக்கு அதிர்வலைகளை
ஏற்படுத்துவதை கண்கூடாக உணர்ந்திருக்கிறோம்..
ரமண மகரிஷி திருவண்ணாமலை
பாதாள லிங்கம் சன்னதியில் அமர்ந்து
தியானித்த இடத்தையும் ,
ஞானானந்தகிரி சுவாமிகளும் ,
அவரது குருவான இரத்னானந்தகிரி
சுவாமிகளும் அமர்ந்து தியானித்த
சுரங்க அறையில் அமைதியாக அந்த
அதிர்வலைகளை உணரமுடிகிற சூழல்
நிலவுவதை அறியமுடிகிறது..
இல்லத்தில் அமர்ந்து தியானிப்பதைவிட
ஆலயங்களிலும் , பிரமிட் வடிவ தியானமையங்களிலும் ,மனம் ஒருமைப்படுவதை உணரலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக