முருகனை நேரில் காணும் வழிபடுதல்

முருகனின் பரிபூரண அருளையும். அவரை நேரில் காணும் பாக்கியத்தையும் பெற என்ன செய்ய வேண்டும்
எளிய முறையில் முருகனை வழிபடுதல்.
இறைவனை 'முருகன்' வடிவில் உணர்வதே 'கௌமாரம்'. இதனை அடிப்படையாகக் கொண்டு, முருகனை வழிபட்டுவந்தால் இறைவனின் தத்துவம் படிப்படியாக விளங்கும்.

எளிய முறையில் முருகனை வழிபடுவது எப்படி எனப் பலர் என்னைக் கேட்டுள்ளனர். என் அனுபவத்தில் நான் முருகனை-இறைவனை உணர்ந்துகொண்ட வழியை இங்கே தந்துள்ளேன். இதற்கான நேரம் சுமார் 15 நிமிடங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இதனைச் செய்துவருவது நல்லது.
இதனை நேரம் பார்க்காமல், ஓய்வு கிடைக்கும்போது - எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
இதனை தொடங்குவதற்கு முன்னால் எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
(உதாரணம் - கைத்தொலைபேசி, இரைச்சல் தரும் கருவிகள் போன்றவை.)

1. உடலை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் - கை-கால்களையும் முகத்தையும் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்வது அவசியம்.
2. ஒரு முருக உருவப் படம் அல்லது முருக சிற்பம். இது இருக்கும் இடத்தில் வேறு உருவ(ங்கள்) இல்லாமல் இருப்பது உகந்தது.
3. உட்கார்ந்துகொள்ள இருக்கை  தரையில் அமரவேண்டும் .
4.எளிமையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
5. கொஞ்சம் விபூதி.அணிந்திருக்க வேண்டும்

கீழ்க்கண்ட பாடல்களைக் கேட்பது அல்லது இணைந்து பாடுவது சிறப்பு.
தயவுசெய்து இந்தப் பாடல் வரிசையில் (முறையில்) வேறு எந்த மாற்றமும் செய்யவேண்டாம் - இது முக்கியம்.




============= வழிபடும் முறை ===============

1. முருகனின் உருவத்தை சுமார் 20 வினாடிகள் பாருங்கள்.

2. இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, இதனை கற்பனை செய்யுங்கள்:

ஒரு மலர்ந்த தாமரைப் பூ. இது உங்கள் இதயத்தில் இருக்கிறது. அந்தப் பூவில் முருகனின் திருப்பாதங்கள். இவற்றில் சிலம்பு, சதங்கை, தண்டை போன்ற ஆபரணங்கள் உள்ளன.
(இதனை சுமார் 20 வினாடிகள் கற்பனை செய்யுங்கள்.)

3. பிறகு, இவற்றை படிக்கலாம், கேட்கலாம், இணைந்துப் பாடலாம்.

'ஓம் சரவணபவ ஓம்' என்று மூன்று முறை,
'அருவமும் உருவமாகி' என்ற 'கந்த புராண'ச் செய்யுள்,
'கௌமாரம் தலைப்புப் பாடல்',   பொருளுக்கு

'ஆடும் பரிவேல்' எனத் தொடங்கும் 'கந்தர் அனுபூதி'ச் செய்யுள் 1,   பொருளுக்கு
'அதிருங்கழல்' எனத் தொடங்கும் திருப்புகழ் 303,   பொருளுக்கு



'ஏறு மயில்' எனத் தொடங்கும் திருப்புகழ் 1328,   பொருளுக்கு
'உருவாய் அருவாய்' எனத் தொடங்கும் 'கந்தர் அனுபூதி'ச் செய்யுள் 51,   பொருளுக்கு
'ஆறிரு தடந்தோள்' எனத் தொடங்கும் 'கந்த புராண'ச் செய்யுள்.

4. இவற்றை முடித்தவுடன்,

"இன்பமே சூழ்க ... இன்பமே சூழ்க
நல்லோர் வாழ்க ... நல்லோர் வாழ்க"

"வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா".   

 என்று சொல்லிவிட்டு,

5. முகத்தை சற்று உயரப் பார்த்தவாறு, கண்களை மூடிக்கொண்டு, முருகனின் உருவத்தைக் கற்பனை செய்துகொண்டு நெற்றியில் விபூதி அணியவேண்டும்.

6. மேலே இருக்கும் 1, 2 ஆம் வரிகளில் செய்தவற்றை மீண்டும் செய்யவேண்டும்.

============= பூர்த்தி ===============


நேரம் இருந்தால்,    வேறு திருப்புகழ் பாடல்(களை)யும் இணைத்துப் பாடலாம்.



சில முக்கிய விளக்கங்கள்:

இரு கைகளின் தத்துவம் - ஒரு கை பரமாத்மா-இறைவன். ஒரு கை நம் ஆன்மா-உயிர். இவை இணைந்திருப்பதே 'அத்வைத்தம்' - இதுதான் முருகன் தத்துவத்தின் குறிக்கோள். முருகனை வழிபடும்போது கைகளை தனித்தனியாக விரித்து வழிபடுவது தவறு.

 .கந்த சஷ்டி விரத நியமங்கள்:

தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.

இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.

ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.

ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முருகனின் பரிபூரண அருளையும். அவரை நேரில் காணும் பாக்கியத்தையும் பெறமுடியும் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக