எலுமிச்சையில் மந்திர சக்தி
எலுமிச்சையில் மந்திர சக்தி தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்ட எலுமிச்சம் பழம்!!!
சிவபெருமானின் நேத்ரகனி என்று எலுமிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் இறை வழிப்பாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.
மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து பஸ்மம் செய்யும் ஆற்றல் கொண்டது. அம்மன் கோவிலுக்கு செல்லும் போது எலுமிச்சம் பழத்தினை அம்மன் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.
அம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது. எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கிடாமல், வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.
எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட வேண்டும். இப்படி பரிகாரம் செய்வதால் திருஷ்டி விலகும்.
ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்ற பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.
ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பூஜைக்கு எலுமிச்சம் பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.
ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.
இந்த முறைகளை பின்பற்றி கடவுளை வழிப்படும்போது, அம்மனின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.
எலுமிச்சையில் மந்திர சக்தி
தேவ கனி என்று கூறப்படும் எலுமிச்சையில் அனைவரும் செய்ய கூடிய முறையில் ஒரு மாந்திரீக பயிற்சியை இங்கே வழங்கி உள்ளேன். இதன் பலன் : மாந்திரீக பயிற்சி முறை முடிந்ததும் அந்த எலுமிச்சையை தன்னுடனே வைத்திருக்க சகல காரிய சித்தியும் உண்டாகும்.
இதை வெள்ளி கிழமை காலை 6:15 க்கு ஆரம்பிக்கவும்.குளித்து வெள்ளை நிற அதை அணிந்து இருக்க வேண்டும். பெண்கள் வெள்ளை நிறம் கலந்த உடைகள் அணியலாம்.காமாட்சி விளக்கில் நல்லெண்ணை தீபமேற்றி ஒரு மர ஸ்டூலில் அல்லது மனையில் கிழக்கு முகமாக வைக்கவும். விளக்கில் இருந்து நாலடி தள்ளி தர்ப்பை புல் பாய் விரித்து அதில் மேற்கு பார்த்தவாறு அமராவும். வலது கையில் எலுமிச்சை கனியை வைத்து கொண்டு (கனியை பேரம் பேசாமல் வாங்க வேண்டும்-கனியில் கருப்பு புள்ளிகள் இல்லாமல் பார்த்து கொள்ளவும்) தீப ஒளியை பார்த்தவாறே அகத்தியர் மந்திரமான " ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய தேசிப்பழம் ஆகர்ஷய வாவா ஸ்வாகா" என 108 முறை ஜெபம் செய்து கனியை விளக்கின் பாதத்தில் வைக்கவும். மீண்டும் விரிப்பில் அமர்ந்து இடது கையை விரித்து அதில் வலது கையை வைத்து கண்களை மூடி புருவ மத்தியில் ஒரு நிலைப்படுத்தி அதே மந்திரத்தை முடிந்த வரை தியானிக்கவும்.சுமார் 15 நிமிடங்கள் அவ்வாறு செய்து முடித்ததும் எழுந்து விடலாம். அதே கனியை வைத்து கொண்டு தினசரி கூறியுள்ள நேரத்தில் தொடர்ந்து 90 நாட்கள் செய்து வர மந்திர சித்தி உண்டாகி விடும். 90 நாட்களுக்குள் விளக்கு பாதத்தில் வைத்த பழம் நகர்ந்து நம்மிடம் வந்து சேரும். இது 45 நாட்களிலேயே கை கூடி விட்டால் கூட மேற்கண்ட பயிற்சியை நிறுத்தி கனியை வைத்து கொண்டு தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். இந்த மந்திர பயிற்சியில் கனி வாடி கனத்து போகுமே அன்றி அழுகி விடாது. கையில் வந்து சேர்ந்த கனியை அடுத்த 60 நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். ஒரு முறை மந்திரம் சித்தி ஆகிவிட்டால் பின்பு ஓரிரு நாட்களிலேயே அடுத்து செய்தால் கனி கைகளில் சேர்ந்து விடும். மிக உபயோகமான சக்தி வாய்ந்த முறை இது. பயிற்சி நாட்களில் மது,மாது,மாமிசம்,புகை போன்றவை அறவே கூடாது. பொதுவாக இந்த மந்திரம் 1.25 லட்சம் முறைகள் உருவேற்றி விட்டால் மந்திரம் நம்முடனே இருந்து தேவையான சமயத்தில் யாருக்காக வேண்டுமானாலும் இதை செய்து கொடுக்கலாம். சுபம் உண்டாகும்.
எலுமிச்சம் பழமா? ... எலிமிச்சம் பழமா? ... எலிமிச்சைதான் கரெக்ட் ... ஒரு கூடைல நிறைய பழங்கள் இருந்திச்சாம் ... அங்க வந்த சில எலிங்க அந்த கூடையில இருந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டதாம். ஆனா ஒரே ஒரு பழத்த மட்டும் சாப்பிடாம மிச்சம் வச்சுட்டு போயிட்டுதாம் ... ஏன்னா அது புளிப்பு...அன்றிலிருந்து இன்றுவரை அந்த பழத்த எலி மிச்சம் வைத்ததால ''எலி மிச்சம் பழம்'' என்று அன்போடு அழைத்து வருகிறோம்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
பதிலளிநீக்குஅருமையான கருத்து சொன்னீர்கள்
பதிலளிநீக்கு