ஆயிரம் கிளிகள் வரும் அதிசயக் கோயில்

இந்தூர் - ஆயிரம் ஆயிரம் கிளிகள் வரும் அதிசயக் கோயில்! உங்கள் வீட்டுத் தோட்டத்திலோ மொட்டை மாடியிலோ... அக்கம் பக்கத்தில் உள்ள மரங்களிலோ ஏதாவது பறவைகள் அமர்ந்து கத்துகிறதா?

செல்போன் கோபுரங்களும்; நுண்கதிர் அடுப்புகளும் ஏற்படுத்தும் காந்த அலைகளில் இருந்து தப்பிக்க சிட்டுக்குருவிகள் முதல் பெரும்பாலான பறவைகள் வரை எல்லாமே காணாமல் போய்கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஒரே இடத்தில் பத்துப் பதினைந்து பறவைகளை ஒன்றாகப் பார்ப்பதே அபூர்வம் எனும்போது தினமும் ஆயிரக்கணக்கான கிலோ தானியங்களை ஓரிடத்தில் இறைப்பதும், அதை தின்ன லுட்சக்கணக்கான கிளிகள் அங்கே வருவதும் வியப்பு அல்லவா!
அந்த ஆச்சரியமூட்டும் நிகழ்ச்சி நடப்பது ஒரு கோயிலில் என்பதுதான் மேலும் வியப்பான் செய்தி.
இன்றல்ல நேற்றல்ல பலப்பல ஆண்டுகளாக நடக்கிறது இந்த சம்பவம். அதனை நீங்கள் பார்க்க வேண்டுமானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம், மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் அருகில் உள்ள பஞ்ச்குயான் மந்திர் என்ற தலத்திற்கு.
இங்கு அமைந்துள்ள ஹனுமன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இருப்பிடத்தின் பெயரால் இந்தக் கோயில் "பஞ்ச்குயான் ஹனுமன் மந்திர்' என்றே அழைக்கப்படுகிறது. இங்குதான் பல ஆயிரக்கணக்கான பச்சை கிளிகள் வருகின்றன.
இந்தக் கோயில் வளாகத்திற்குள் சிவபிரானுக்கும் ஒரு சன்னதி அமைந்துள்ளது. பக்தர்களைப் போலவே பச்சைக் கிளிகளும் கூட கடவுள் மீது பக்தி கொண்டிருப்பதை இங்கு காண முடியும். பல வருடங்களாக பச்சை கிளிகள் இங்கு வருவதாகக் கோயிலில் வசிக்கும் துறவிகள் சொல்கிறார்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல சுமார் நான்காயிரம் கிலோ தானியங்கள் பச்சைக் கிளிகளுக்காக இங்கே தூவப்படுகிறது.
தானியம் இறைக்கப்படும்போது அமர்ந்திருக்கும் கிளிகள், கூட்டமாக பறந்து வருகின்றன. உடனே தின்றுவிட ஆரம்பிப்பதில்லை அவை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டிற்குப் பிறகு பிரசாதம் பெற்றுச் சாப்பிடும் அதே நேரத்தில் பச்சைக் கிளிகளும் தானியத்தை உண்ணத் துவங்குவதுதான் வியக்க வைக்கிறது.
அதுமட்டுமா? தானியத்தை உண்பதற்கு முன்பு ஒவ்வொரு கிளியும் ஹனுமன் சிலை நோக்கி தம் தலையைத் திருப்பிப் பார்த்த பின்னரே தானியத்தைக் கொத்தித் தின்கிறது. பச்சைக் கிளிகளின் இந்த பக்தியைக் கண்டு இங்கு வரும் அனைவரும் வியக்கின்றனர்.
பச்சைக் கிளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால் 3,000 சதுர அடிபரப்பளவுள்ள கான்கிரீட் கூரையை பக்தர்களின் உதவியுடன் கோயில் நிர்வாகம் அமைத்துள்ளதாம். தினமும் காலை 5.30 முதல் 6.00 மணி வரையும் மாலை 4 முதல் 5 மணி வரையும் கான்கிரீட் தளத்தின் மீது தானியங்கள் பரப்பப்படுகின்றன. சுமார் 1 மணி நேரத்தில் தானியங்கள் முழுவதையும் கிளிகள் தின்று விடுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
இரை தின்ன வரும் கிளிகள், இறை பக்தியோடு வருவோர்க்கு இணையாகவே கருதப்படுகின்றன இங்கே.
பச்சைக்கிளிகள் குவியும் இக்கோலுக்கு வந்த தானியம் அளித்து வழிபடுவோர் வாழ்வின் பசுமை வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக