நமது சமையத்தின் உனமையான பெயர் என்ன?

இந்து என்ற சொல் சிந்து என்ற சமக்கிருதச் சொல்லிலிருந்து பாரசீக மொழி மூலமாக உருவான சொல்லாகும். இந்து என்ற சொல், முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியற் சொல்லாக, சிந்து நதியின் கிழக்குப் பக்கம் வசிக்கும் அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது அப்படி பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்து என்ற சொல் ஒரு மதத்தைக் குறிக்காமல் ஒரு இடத்தைக் குறிப்பதாகவே இருந்தது  ஜவகர்லால் நேரு 1946ல் தான் இயற்றிய "இந்தியாவின் கண்டுபிடிப்பு" (The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார்                                                                                                                                                                                                                                  ஐரோப்பிய மொழிகளில் இந்து என்ற சொல், பாரசீக மொழி மூலமாக அரேபிய மொழியில் உருவான சொல் வழக்கான அல்-ஹிந்த் என்பதிலிருந்து உருவானது.                                                                                                                                                                         13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துஸ்தான் எனும் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது.  பின்னர், இந்துக்கா (Hinduka) என்ற சொல் சிற்சில சமக்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. உதாரணமாக, பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள் (Rajataranginis of Kashmir (Hinduka, c. 1450)),                                                                                                                                                                                                   16ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுக்குள் இயற்றப்பட்ட சிற்சில வங்காள கௌடிய வைணவ நூல்கள். இவ்விடங்களில், இந்து என்ற சொல், இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் (Mleccha) வேறுபடுத்திக் காட்டவே பயன்படுத்தப்பட்டது                                                                                                                      18ஆம் நூற்றாண்டு இறுதியில், ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேறிகளும், சிந்து நதிக்கப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூசு (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.                                                      19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழியில் இந்து சமயம் என்ற சொல், இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாசார மரபுகளைச் சேர்த்துக் குறிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், இந்து என்ற சொல் இசுலாமியர்கள், சீக்கியர்கள், சைனர்கள், மற்றும் கிறித்தவர்கள் தவிர பிறரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது                                                                                                                                                                                                          தற்காலத்தில், சமயம் மற்றும் மெய்யியல் சார்ந்த ஆய்வுகளில் இந்து என்ற சொல் இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாசார மரபுகளைச் சேர்த்துக் குறிப்பதாகவே பொருள் கொள்ளப்படுகிறது.அப்படியென்றால் நமது சமையத்தின் உனமையான பெயர் என்ன?நமது சமையத்தின் உனமையான பெயர் என்ன?எனபதை எமது அடுத்தபதிவில் விளக்கமாக கான்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக