இந்தியா தாய் நாடா? தந்தைநாடா?

இந்தியா தாய் நாடா? தந்தைநாடா?                                                                                                                                                  பழம்பெரும் பரத கண்டம்  எப்போது                                                                                                                                                பாரத நாடு என்று  மாற்றப்பட்டத்து                                                                                                                                                                                                                                                                                    இந்தியத் தாய் வரலாற்றுப் பின்னணி பழம்பெரும் பரத கண்டம் (Bharata Khanda or Bharata Ksetra)  எனும் சொல் இந்து சமய நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசாங்கள், மற்றும் புராணங்களில் தற்கால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளின் புவியியலைக் குறிப்பிடும் பெரும் நிலப்பரப்பாகும்.
இந்து சாத்திரங்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கூற்றுப்படியும், இப்பூவுலகில் மக்கள் செழிப்புடன் வாழத் தக்க இடமாக பரத கண்டம் விளங்கியதாக தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்  இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என சமஸ்கிருத மொழியில் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, துஷ்யந்தன் - சகுந்தலை இணையரின் மகன் பரதன் பெயரில்தான்.
                                                                                                                                                                                                                                                                          19வது நூற்றாண்டின் இறுதியில் இந்திய விடுதலை இயக்கத்தின் அங்கமாக பாரத மாதாவின் உருவம் தீட்டப்பட்டது. 1873இல் முதன்முதலாக கிரண் சந்திர பானர்ஜியின் பாரத் மாதா என்ற நாடகம் நடத்தப்பட்டது. 1882இல் எழுதப்பட்ட பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்தமடத்தில் "வந்தே மாதரம்" பாடல் இடம் பெற்றது                                                       இது விரைவிலேயே விடுதலை இயக்கத்தின் பாடலாக அமைந்தது.
இதன் உருவகத்தை விவரித்த பிபின் சந்திர பால் இந்து மெய்யியல் வழக்கங்களுடனும் வழிபாட்டு முறைமைகளுடனும் ஒருங்கிணைத்தார். இந்த உருவகம் அனைத்து இந்துக் கொள்கைகளையும் தேசியத்தையும் அடையாளப்படுத்தியது
அபனிந்தரநாத் தாகூர் பாரத மாதாவை காவி உடையில் தேவியாக, நான்கு கைகளில் வேதங்கள், நெற்கற்றை, செபமாலை, வெள்ளைத் துணி ஏந்தியவாறு ஓவியம் தீட்டினார்.  விடுதலைப் போராட்டத்தின் போது இந்தியர்களிடையே தேசிய உணர்வை உருவாக்க பாரத மாதா உருவகம் பயன்படுத்தப்பட்டது.                                                                                                     பாரத மாதா கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன; 1936இல் மகாத்மா காந்தி திறந்து வைத்த பாரத மாதா கோயில் காசி பல்கலைக்கழகத்தில் உள்ளது. 1983இல் விசுவ இந்து பரிசத்தால் கட்டப்பட்டு, இந்திரா காந்தியால் திறக்கப்பட்ட பாரத மாதா கோயில் அரித்வாரில் உள்ளது

இந்தியாவைக் கடவுளாக சித்தரிப்பதால் தேசப்பற்றையும் கடந்து அனைத்து இந்தியர்களும் தேசப் பாதுகாப்பில் பங்கேற்பதைத் தங்கள் சமயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது

பாரத் மாதா கி ஜெய்  ("இந்திய அன்னைக்கு வெற்றி") என்பது இந்தியத் தரைப்படையின் முழக்கமாக இருந்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக