கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?  1

 

 
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?                (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
 படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் அனைவரும் இதை படித்துவிட்டு 
சொல்லுங்கள் கோவில் வேண்டுமா 
வேண்டாமா என்று!!!!!!
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா 
ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது 
என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் 
கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 
100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் 
விளக்கமாக  ...................
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் 
இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான 
லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு 
ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் 
மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் 
ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த 
சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் 
கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் 
போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய 
சிலைதான் இந்த மையப்பகுதியில் 
வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது 
மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் 
அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் 
காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் 
எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் 
சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே 
கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் 
கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த 
மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு 
தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு 
தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த 
எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் 
கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று 
சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து 
இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது 
அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக 
அதுவும் வாசலில் இடது மற்றும் வலது 
புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் 
ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. 
ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் 
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த 
கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து 
வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று 
பாதை இது தான் அதனால் தான் 
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே 
எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே 
உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த 
மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி 
நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் 
மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் 
காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் 
தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக 
அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு 
(இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்)
அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி 
வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த 
எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு 
டெக்னிக்கல் செயல்தான். 
அது போக மந்திரம் சொல்லும் போதும், 
மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் 
அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் 
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு 
அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் 
மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, 
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 
ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே 
நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் 
ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் 
மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், 
பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், 
விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற 
எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் 
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் 
வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் 
சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு 
நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், 
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி 
(புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),                        கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர்   
செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் 
ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை 
கோயிலில் உள்ளது போல் எங்கும் 
கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் 
உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் 
உட்கொண்டவர்களுக்கு இது ஒரு 
ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் 
ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த 
உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு 
சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் 
இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, 
வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் 
இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் 
சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் 
ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று 
வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் 
அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் 
காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் 
சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை 
காட்டும் போது தான் கதவை திறக்கும் 
காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக 
எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து 
அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர 
வரும் போது தான் கதவை அல்லது திரையை 
திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு 
வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை 
எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் 
உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது 
தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர 
வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் 
முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே 
மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் 
உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு 
தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று 
இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த 
தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல 
பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை 
கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு 
கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி 
மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு 
வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் 
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது 
சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் 
எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் 
இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் 
இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் 
என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து 
பயணம் செய்திருப்பினும் அந்த சில 
நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த 
உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு 
வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் 
உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் 
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் 
இந்த கோயிலின் மூலஸ்தானம். 
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் 
இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் 
தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் 
இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் 
இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் 
மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண 
கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் 
படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் 
இல்லாமல் போன காரணம் கோயில் 
கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு 
சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் 
பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் 
அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி 
மற்றும் இது தான் கோயிலின் வெளி 
பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் 
புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் 
செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா 
ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் 
ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் 
உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித 
ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை 
விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை 
கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் 
உடல் மட்டுமல்ல அவனின் மனதும் 
மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட 
கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த 
எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது 
தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் 
புளியோதரை ஆகட்டும் சர்க்கரை 
பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு 
ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட 
முடியாது என்பது தான் நியதி. சில 
கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் 
இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே 
உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற 
மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் 
இந்த கோயில் டெக்னாலஜி.
கோவில் ஏன்????
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக