சிவபெருமான் பார்வதிக்கு

சிவன் பார்வதிக்கு உபதேசித்த வாழ்க்கை தத்துவங்கள்..!
இருளின் வடிவமாக திகழும் சிவபெருமானுக்கு ஒளியூட்டுவது பார்வதி தேவியாவார். சிவனின் மூத்த மனைவியாகிய சதியின் மனித அவதாரம் தான் பார்வதி.
தன்னுள் பாதியாக பார்வதி என்பதை உணர்த்தும் விதமாக தன்னுடலில் பாதியை சக்திக்கு வழங்கினார் சிவன். சிவன் தான் சக்தி, சக்தி தான் சிவன்.
இந்நிலையில், ஆதி முதல் கடவுளான சிவபெருமான் பார்வதிக்கு பலமுறை வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை புகட்டியுள்ளார். அவை அனைத்தும் மனிதனின் குடும்பம், இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வழிவகுக்கும்.
ஒரு மனிதன் மரியாதையுடனும், உண்மையாய் இருப்பதும் அவனது நற்பண்புகளாகும். அதுவே நேர்மையில்லாமல், உண்மைக்கு புறம்பான ஈடுபடுவதே செய்யும் பாவமாகும். நற்செயல்கள் ஒருபோதும் வாழ்க்கையை சூனியமாக்காது.
ஒரு மனிதன் தான் இழைக்கும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவராக இருக்க வேண்டும். தவறை மறைக்க நினைப்பவர்களுக்கு ஏழு ஜென்மத்து பாவம் உண்டாகும்.
புகைப்படம்
ஒருவர் பேசும் வார்த்தை, எண்ணம், நடவடிக்கையில் தீமையை வெளிப்படுத்தக் கூடாது.
பிற உயிர்களிடம் அன்புபாராட்டி இணக்கமாக இருக்க வேண்டும்.அது வெற்றிக்கான தாரக மந்திரம். வாழ்வில் எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெற்றியை அடைய முடியும்.
எதிர்ப்பார்ப்பு தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். வாழ்வில் ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்று எண்ணி, ஒன்றன்பின் ஒன்றாக செல்வது மிகப்பெரிய பாவச்செயல் ஆகும். இதற்கு பதில் தியானம், கடவுள் வழிபாடுகளில் காலம் கழித்தால் வாழ்வில் புண்ணியம் சேரும் என சிவபெருமான் பார்வதிக்கு உபதேசங்களை வழங்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக