இதுதான் விதி?

இதுதான் விதி?

                                                                                                                                                                                                                             இந்திரன் மனைவி இந்திராணி ஒரு
கிளியைமிகவும் பிரியமாக வளர்த்துவந்தாள்....
ஒரு நாள் அந்த கிளிநோய்வாய்ப்பட்டு
விட்டது.....அதை பரிசோதித்தமருத்துவர் இனிஅது பிழைக்காது என்றுகூறிவிட்டார்....
உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி ,
இந்தகிளியை எப்படியாவது
காப்பாற்றுங்கள்...கிளி இறந்துவிட்டால் நானும்
இறந்துவிடுவேன் என்றாள்....
இந்திரன் , கவலைப்படாதே இந்திராணி...நான்
உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன்.
..ஒவ்வொருவர்தலையெழுத்தையும் எழுதுபவர்
அவர்தானே ? அவரிடம் சென்று கிளியின்
தலையெழுத்தை மாற்றி எழுதிவிடுவோம் என்று
சொல்லிவிட்டு , பிரம்மாவிடம் சென்று
விஷயத்தை கூறினான்....விஷயத்தை கேட்ட பிரம்மா இந்திரா....படைப்பது மட்டுமே என்
வேலை...உயிர்களை காப்பது சாட்சாத்
மஹாவிஷ்ணுவின் தொழில்...நாம் அவரிடம்  சென்று உதவி கேட்போம்...வா ...நானும்                  உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை
அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம்
சென்று விஷயத்தை தெரிவித்தார்....
மஹாவிஷ்ணுவோ , உயிர்களை காப்பது
நான்தான் ...ஆனால் உன் கிளி இறக்கும்
தருவாயில்,இருக்கிறது.....அழிக்கும் தொழிலை
மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற
வேண்டும்...வாருங்கள் நானும் உங்களுடன்
வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார்....
விபரங்களை கேட்ட சிவன் , அழிக்கும் தொழில்
என்னுடையதுதான்...உயிர்களை எடுக்கும்
பொறுப்பை நான் எமதர்மராஜனிடம்
ஒப்படைத்துள்ளேன்...வாருங்கள்....நாம்
அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த
கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று
சொல்லிவிடுவோம் என்று சொல்லி அவர்களை
அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார்....
தன்னுடைய அவைக்கு சிவன் ,
மஹாவிஷ்ணு ,பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதை கண்ட எமதர்மன் உடனே எழுது ஓடி வந்து வரவேற்கிறார்..விஷயம்
முழுவதையும்கேட்ட அவர் ,ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில், எந்த சூழ் நிலையில் , என்ன
காரணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை
ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில்
தொங்கவிட்டுவிடுவோம்..அந்த ஓலை அறுந்து
விழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்....வாருங்கள் அந்த அறைக்கு                    சென்று , கிளியின் ஆயுள் ஓலை எது
என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம்
என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்....
இப்படியாக , இந்திரன் ,பிரம்மா,விஷ்ணு, சிவன், எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த
அறைக்குச்சென்றனர்... ....அவர்கள்
உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து
விழுகிறது...உடனே அவர்கள் அவசரமாக
சென்று அந்த ஓலையை எடுத்து
பார்க்கின்றனர்..அது அந்த கிளியின் ஆயுள்
ஓலை.....அவசரமாக அதைப்படித்து பார்க்கின்றனர்....
அதில்......இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன்,
எமதர்மன்
ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த
அறைக்குள் நுழைகிறார்களோ ,அப்போது
இந்த கிளி இறந்துவிடும்..... என்று
எழுதப்பட்டிருந்தது...
இதுதான் விதி  ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக